மாமன்னரை சந்தித்துவிட்டு நேற்று இறுகிய முகத்துடன் வெளியே வந்த இடைக்காலப் பிரதமர் மகாதீர், மார்ச் 2ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவித்தார்.
ஆனால் அப்படி நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்று சபாநாயகர் முஹமட் அரிஃப் முஹமட் யூசோப் தெரிவித்ததால் மலேசிய அரசியலில் அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. மாமன்னர் அனுமதி கொடுத்தால் மட்டுமே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்று திரு முஹமட் அரிஃப் கூறியுள்ளார்.
இதனை உறுதி செய்துள்ள மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துதின் அஹமது ஷா, அடுத்த பிரதமரை நான்தான் முடிவு செய்வேன், நாடாளுமன்றம் அல்ல என்று கூறினார்.
இதனால் மார்ச் 2ஆம் தேதி நாடாளுமன்றம் அமர்வு இராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்சித் தலைவர் களை மாமன்னர் சந்தித்து அவர்களை எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்றனர் என்பதைக் கேட்டு அறிவார் எனத் தெரிகிறது.
முன்னதாக சபாநாயகர் முஹமட் அரிஃப் இன்று (பிப்ரவரி 28) காலை மாமன்னரை இரண்டு முறை சந்தித்தார். அனால் சந்திப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடைபெறும் என்று இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறுவது பொருத்தமில்லாதது என்று பக்கத்தான் ஹரப்பான் சாடியது.
நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மாமன்னரின் அதிகாரத்துக்கே சவால் விடுப்பது போல உள்ளது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அது கூறியது.
இந்த நிலையில் ஈஸ்ட்டின் ஹோட்டலில் பிரதமர் வேட்பாளரான அன்வார் இப்ராஹிம் தலைமையில் கூடிய கெஅடிலான் கட்சியினர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இடைக்காலப் பிரதமரான டாக்டர் மகாதீர் தொடங்கிய பெர்சாத்துக் கட்சி, அக்கட்சியின் தலைவரான முஹைதீன் யாசினை பிரதமர் வேட் பாளராக முன் நிறுத்தியுள்ளது.
அம்னோ, பாஸ் ஆகிய இரு கட்சி களும் முஹைதீன் யாசினுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததால் பெர்சாத்துக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
பெர்சாத்துக் கட்சி யின் 36 உறுப்பினர்களுடன் முஹை தீன் யாசினுக்கு 96 பேர் ஆதரவு உள்ளது. இது பெரும்பான்மைக்கு 19 குறைவு
#மலேசியா #அரசியல் #தமிழ்முரசு