முடிவுக்கு வந்தது மலேசியாவின் அரசியல் குழப்பம்; பிரதமராகிறார் முகைதீன் யாசின்

அரசியல் கட்சித் தலைவர்களை இன்று (பிப்ரவரி 29) சந்தித்த பிறகு, திரு முகைதீன் யாசினை மலேசியாவின் அடுத்த பிரதமராக மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுத்துள்ளார்.

திரு முகைதீன் யாசின் நாளை காலை 10.30 மணிக்கு நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்பார் என இஸ்தானா நெகரா அறிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கான பெரும்பான்மை ஆதரவுக்காக பக்கத்தான் ஹரப்பானுடன் மீண்டும் இணைய இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் முடிவெடுத்த நிலையில் அரண்மனையிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, பிபிபிஎம் கட்சியின் தலைவரான திரு முகைதீன் யாசின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக மாமன்னர் ஊகிக்கிறார்,” என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இஸ்தானா குறிப்பிட்டது.

இது தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு நாளைய (1/03/2020) தமிழ் முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#மலேசியா #எட்டாவது பிரதமர் #மாமன்னர் #அரண்மனை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!