மலேசிய கட்டுமான தளத்தில் விபத்து; உயிருடன் மண்ணுக்குள் புதைந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள்

மலேசியாவின் குவாந்தானுக்கு அருகில் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் இருவர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

நேற்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவர் 43 வயது முகமது ஷோரிஃபுல்; மற்றவர் 27 வயது ஜுல்ஹாஸ் ரஹ்மான்.

அந்த கட்டுமானத் தளத்தில் சாக்கடைக் குழாய் பதிக்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது நேற்று (மார்ச் 5) மாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

“ஆறு அடி ஆழ குழியில் இந்த மூவரும் பணிபுரிந்துகொண்டிருந்தனர். இரண்டு மண் அகழும் இயந்திரங்கள் அந்தக் குழிக்கு மேலே இயக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

“மண் அகழ்வு பணியின்போது அந்தக் குழியின் ஓரத்தில் சேகரிக்கப்பட்ட மண் குழிக்குள் விழுந்தது,” என்று டெர்மர்லோ மாவட்ட போலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

குழிக்குள் இருந்த மூவரில் ஒரு ஊழியர் குழிக்குள் விழுந்த மண்ணிலிருந்து இழுத்து மீட்கப்பட்டார். மற்ற இருவரையும் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.

அதனையடுத்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஷோரிஃபுல்லின் உடலை மாலை 4.45 மணிக்கும் ஜுல்ஹாசின் உடலை மாலை 5 மணியளாவிலும் குழியிலிருந்து வெளியில் கொண்டு வந்தனர்.

#மலேசியா #வெளிநாட்டு ஊழியர் #விபத்து #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!