புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த மலேசிய பிரதமர்

மலேசிய பிரதமர் முகைதின் யாசின், தம்முடைய உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை மறுத்துள்ளார். திரு முகைதினுக்கு தற்போது புற்றுநோய் இல்லை என்பதைக் குறிப்பிடும் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திரு முகைதினுக்கு 2018ஆம் ஆண்டில் கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டிகள் அகற்றப்பட்டு, வேதிமுறை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதனைக் குறிப்பிடும் பன்டாய் மருத்துவ நிலையத்தின் அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

“பிரதமர் முகைதினுக்கு தற்போது புற்றுநோய் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என பல மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்த நோய் அவருக்கு மீண்டும் வருவது தொடர்பான ஆதாரமும் இல்லை. பிரதமர் முகைதின் தனது அலுவல்களை மேற்கொள்ளும் விதத்தில் மருத்துவ ரீதியாக உடல்நலத்துடன் இருக்கிறார்,” என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

கடந்த மாதத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, அதிகாரிகளைச் சந்தித்ததாகக் கூறப்பட்டதையும் திரு முகைதின் மறுத்துள்ளார். அந்த அதிகாரிகளுக்கு, பின்னர் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!