கெடாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

அலோர் ஸ்டார்: கெடாவில் கிருமித் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி உள்ளது.

தாவார், பாலிங், கோலா முடா, சாலா மற்றும் யானில் உள்ள பல இடங்களில் உணவகங்களில் உணவருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் முகமது சனுசி முகமது நூர் கூறினார்.

இரவு சந்தைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனு

மதிக்கப்படும் என்றும் சனுசி கூறினார்.

பொது பூங்காக்களும் மூடப்படும். திருமணங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கொண்டாட்ட விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.

இந்த கட்டுப்பாடுகள் கிருமித்தொற்று பதிவான இடங்களில் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே மலேசியாவில் நேற்று புதிதாக 12 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஆறு கெடாவில் பதிவானவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!