மலேசியாவில் மாமன்னர், பிரதமர் அவமதிப்பு: இருவரிடம் விசாரணை

மலே­சிய மாமன்­ன­ரை­யும் பிர­த­மர் முகைதீன் யாசி­னை­யும் அவ­ம­தித்­த­தா­கக் கூறப்­பட்ட புகார் தொடர்­பில் முன்­னாள் அமைச்­சர் உட்­பட அர­சி­யல்­வா­தி­கள் இரு­வரை போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

பிர­த­மரை அவ­ம­திக்­கும் வித­மாக ஃபேஸ்புக்­கில் காணொ­ளி ஒன்றை வெளி­யிட்­ட­தா­கப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, முன்­னாள் அம்னோ உச்­ச­மன்ற உறுப்­பி­ன­ரான லோக்­மன் நூர் ஆடம் ஒரு­நாள் காவ­லில் வைத்து, விசா­ரிக்­கப்­பட்­டார். பர­வ­லா­கப் பகி­ரப்­பட்ட அந்தக் கா­ணொ­ளி­யைப் பதி­வேற்­றம் செய்ய அவர் பயன்­படுத்­திய மின்­ன­ணுக் கரு­வி­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

அதே­போல, முந்­தைய பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சி­யின்­போது அமைச்­ச­ராக இருந்த முஜா­கித் யூசோஃப் ராவா, மாமன்­னரை இழிவு­ப­டுத்­தி­விட்­ட­தாக விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார். கடந்த மார்ச் மாதம் பிர­த­ம­ராக முகை­தீன் யாசினை நிய­மித்­ததை அடுத்து, மாமன்­னரை அவ­ம­திக்­கும் வகை­யில் அவர் கருத்துரைத்ததாகச் சொல்­லப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், போலிஸ் விசா­ரணைக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு அளிப்­பேன் என்று முஜா­கித் கூறி இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!