மலேசிய முன்னாள் அமைச்சருக்குச் சிறை

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அம்னோ கட்சியின் தலைமைப் பொருளாளரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சருமான அட்னான் மன்சூருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தபோது உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து அட்னான் 2 மில்லியன் ரிங்கிட் ($660,000) லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டது.

70 வயது அட்னானுக்கு 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து அட்னான் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் நிலுவையில் உள்ளது.

தமக்கு எதிராக அரசியல் சதி நடந்திருப்பதாக அட்னான் கூறியதை மலேசிய உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது ஸைனி மஸ்லான் ஏற்க மறுத்தார்.

அட்னான் லஞ்சம் வாங்கியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!