கிருமித்தொற்று கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் சுற்றுலாத் துறை இயங்க அனுமதிக்க வேண்டும் என்ற குரல் மலேசியாவில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
வரும் 16ஆம் தேதி லங்காவி சுற்றுலாத் தலம் திறக்கப்பட உள்ள நிலையில் மலேசிய சுற்றுலா மற்றும் பயணத்துறை முகவர்கள் சங்கம் இந்தக் கோரிகையை விடுத்துள்ளது.
முடங்கிக் கிடக்கும் உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்றும் கட்டுப்பாடுகளுடனான சுற்றுப் பயணத்துக்கு அனுமதி வழங்கலாம் என்றும் சங்கத்தின் தலைவர் டான் கோக் லியாங் தெரிவித்துள்ளார்.
“லங்காவியுடன் பினாங்கு, திரங்கானு, பாகாங், மலாக்கா, சாபா மற்றம் சரவாக் போன்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பபடுவது ஆற்றல் மிக்கதோர் உத்தியாக அமையும்.
“இருப்பினும் ஒன்றுமே திறக்கப்படாத நிலையைக் காட்டிலும் லங்காவி திறக்கப்படுகிறதே என்ற வகையில் சுற்றுலாத்துறையைத் திறந்துவிடும் முதல் ஏற்பாட்டை சங்கம் வரவேற்கிறது,” என்று அவர் நேற்று கூறினார்.
“லங்காவியைத் திறந்துவிடும் முன்னோடித் திட்டம் வெற்றி காணும் என்று நம்புவோம். அதேநேரம், எதிர்பாராத விளைவுகளால் இந்த முயற்சி தோல்வி அடைந்தால் என்ன செய்வது? இதர மாநிலங்கள் சுற்றுப்பயண நடவடிக்கைகளைத் தொடங்க இயலாதா? என்பன போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.