மருத்துவமனையில் நஜிப் 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது. திரு நஜிப்பின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதகாவும் கூறப்பட்டது.

திரு நஜிப் இருக்கும் காஜாங் சிறையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் எப்போது மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்படுவார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
1எம்டிபி ஊழல் விவகாரத்தில் திரு நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. சென்ற மாதம் 23ஆம் தேதி அவர் தனது சிறைத் தண்டனையை தொடங்கினார்.

இந்நிலையில், திரு நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர் லஞ்ச வழக்கு ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!