நஜிப்பின் மனைவிக்கு 10 ஆண்டு சிறை, $303 மி. அபராதம்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் மனைவி ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருவாட்டி ரோஸ்மா மன்சூர்க்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் ($303 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் அவரது கணவர் நஜிப் ரஸாக் 1எம்டிபி விவகாரத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

70 வயதான திருவாட்டி ரோஸ்மா 194 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் குற்றவாளி என மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரவாக் மாநிலத்தில் சூரிய சக்தி திட்டத்தை நிறுவனம் ஒன்று பெறுவதற்கு திருவாட்டி ரோஸ்மாவிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், திருவாட்டி ரோஸ்மா கண்ணீர் வடிய தொடங்கினார். தான் லஞ்சம் பெற்றதை யாரும் பார்க்கவில்லையென்றும், தீர்ப்பு தனக்கு ஆழ்ந்த சோகத்தை தருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது திருவாட்டி ரோஸ்மா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மேலும் 17 பணமோசடி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் உள்ளன.

சென்ற வாரம் அவரது கணவர் நஜிப்புக்கு மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதியை மில்­லி­யன் கணக்­கில் தவ­றா­கக் கையாண்­ட­தற்­காக 12 ஆண்­டு­கள் தண்­ட­னை விதிக்கப்பட்டது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!