ஜோகூர் பாரு: வெள்ளம் காரணமாக மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்துக்கான வேளாண், வேளாண் சார்புத் துறை மற்றும் கிராமப்புறக் குழுத் தலைவரான ஸஹாரி சாரிப் இவ்வாறு கூறியுள்ளார்.
நோன்புப் பெருநாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஜோகூரில் வெள்ளத்தால் பல பண்ணைகள் சேதமடைந்துள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளது.
வெள்ளத்தால் இதுவரை வேளாண் துறைக்கு 35.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.