கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்த நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட பாதுகாவல் அதிகாரி உயிரிழந்தார்.
இச்சம்பவம் புதன்கிழமை (3 மே) பின்னிரவு தாமான் செப்புட்டா பகுதிக்கு அருகே நிகழ்ந்தது.
பின்னிரவு 12.54 மணியளவில் நிலச்சரிவு குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது.
ஒருவர் மண்ணுக்குள் சிக்கியிருந்ததாகத் தங்களிடம் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.