மாணவர்களை உற்சாகமூட்டும் சவாலான வெளிப்புற சாகச நடவடிக்கைகள் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படவிருக்கின்றன. வரும் பிப்ரவரியிலிருந்து உயரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகள் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிப்புற சாகசக் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அமைச்சு கூறியது.
உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்புற நடவடிக்கை களுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், அதற்கான வசதிகளுக்கு தேசிய விளையாட்டுச் சங்கம் அல்லது வட்டார வெளிப்புற நடவடிக்கைகளுக்கான நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை நடத்தும் பயிற்றுவிப்பாளர்களும் உரிய அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியம். இது, முதல் பாதுகாப்பு அம்சமாகும்.
இரண்டாவதாக, வெளிப்புற நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடங்கப்பட வேண்டும். அதாவது 'ஸிப்லைன்' போன்ற சவாலான நடவடிக்கைகளும் தடைகளுடன் கூடிய நடவடிக்கைகளும் வழக்கத்தைவிட 50 விழுக்காடு குறைவான செயல்பாடுகளுடன் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மறுபடியும் தொடங்க வேண்டும். இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வெளிப்புற கற்றல் நடவடிக்கைகள் தொடங்கப் படுவதால் நடத்துநர்கள் தங்களை சரிசெய்து கொள்ள இந்த அவகாசம் வழங்கப்படுகிறது.
மூன்றாவது பாதுகாப்பு அம்சமாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் நடவடிக்கைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் மேற்பார்வையிட பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரி களை கல்வி அமைச்சு நியமித்துள்ளது.
கல்வி அமைச்சின் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பரி சீலித்த வெளிப்புற சாகசக் கல்விக் கான மன்றம், உயரம் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இத்தகைய நடவடிக்கைகளில் தேசிய தரத்தை உருவாக்கும் முயற்சியில் மன்றம் ஈடுபட்டு வருகிறது.
இதனை கல்வி அமைச்சு பின்னர் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்றுவிப்பாளர்களின் சான்றிதழ்கள் காலத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு மறுபயிற்சிகளும் மறுசான்றிதழ் வகுப்புகளையும் கல்வி அமைச்சு நடத்தி வருகிறது.
சவாலான வெளிப்புற நடவடிக்கைகளை பாதுகாப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையோடு பயிற்றுவிப்பாளர்கள் ஈடுபடுவதற்காக 2023 ஜனவரியில் திறன் சோதனைகளையும் நடத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங்கிலோ-சீனப் பள்ளியைச் சேர்ந்த ஜெத்ரோ புவா எனும் மாணவர் பாதுகாப்பு கயிற்றில் தொங்கியபடி வெளிப்புற சாகச நடவடிக்கையில் ஈடுபட்டபோது கால் இடறி விழுந்து மயக்கமானார்.
கூ டெக் புவாட் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் காலை மரணமடைந்தார்.
இதையடுத்து அனைத்து வெளிப்புற சாகச நடவடிக்கைளை அமைச்சு நிறுத்தி வைத்திருந்தது.