ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே வெற்றி புதுடெல்லி: டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானும் ஸிம்பாப்வேயும் வெற்றி பெற்றுள்ளன. ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது. தொடக்க ஆட்டக் காரராகக் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் முகம்மது ஷசாத் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்தார். மற்றொரு வீரரான அஸ்கர் 55 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்கள் சேர்த்தது.
171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஸ்காட்லாந்து. தொடக்க ஆட்டக்காரராக கள மிறங்கிய ஜார்ஜ் முன்ஷெவும் (40), கைல் கேட்செரும் (41) அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் குவித்தனர். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய வீரர்களால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால் ஸ்காட் லாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆட்டநாயகனாக ஷசாத் தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸிம்பாப்வே-யும் ஹாங்காங்கும் மோதின. பூவா தலையாவில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீசியது.
ஆப்கானிஸ்தானின் முகம்மது ஷசாத் (வலது) தம்மிடம் வந்த பந்தை பறக்கவிட, அதைப் பார்க்கிறார் ஸ்காட்லாந்தின் விக்கெட்காப்பாளர் மேட் கிரோஸ் (இடது). படம்: ஏஎஃப்பி