சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்குக் கிளம்புவோரில் பத்தில் எட்டு பயணிகள் தற்போது விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே பாதுகாப்புச் சோதனைகளை முடிக்க முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முனையம் 2, 3 ஆகியவற்றில் பொது சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முனையம் 1ல் முன் கூட்டியே பாதுகாப்புச் சோதனையை முடிக்கும் வசதி உள்ளது.
முன்கூட்டியே பாதுகாப்புச் சோதனைக்கான குழுமத்தில் இடம்பெறும் 23 விமான சேவை களைப் பயன்படுத்துவோர் இச்சேவையை தினமும் காலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை பயன்படுத்தலாம். விமானம் கிளம்பு வதற்கு 12 அல்லது 24 மணி நேரத்துக்கு முன் பாது காப் புச் சோதனையைச் செய்யலாம். இவை தவிர, எஸ்ஐஏ, சில்க் ஏர், கெத்தே பசிபிக், எமிரேட் உட்பட மேலும் 25 விமான சேவைகள் தனியாக முன் கூட்டிய பாதுகாப்பு சோதனை வசதியை வழங்குகின்றன.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள புதிய முறை, 10ல் எட்டுப் பயணிகள் முன்கூட்டியே பரிசோதனையை முடிக்க வசதியளிக்கிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்