ப.சிதம்பரம்: கச்சா எண்ணெய் விலை சரிவால் பெற்ற ரூ.1.40லட்சம் கோடி எங்கே?

சென்னை: அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் அடைந்துள்ள வீழ்ச்சியால் நரேந்திர மோடி அரசு சேமித்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி எங்கே போனது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் வணிக நிர்வாகவியல் பயிலகத்தில் மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து நேற்று முன்தினம் ஆய்வுரையாற்றிப் பேசிய ப.சிதம்பரம், "மோடி அரசு பதவியேற்றபோது அனைத்துலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 109 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது 30 டாலராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததுள்ளது.

இதனால் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலரை மத்திய அரசு சேமிக்கிறது. வரி விழுக்காடு, தனியாருக்கான பங்குகளைக் கழித்துப் பார்த்தால்கூட, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை அரசு சேமித்துள்ளது. விவசாயம், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளுக்கு அதனைச் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். நல்ல ஆக்கபூர்வமான முதலீடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், செய்யத் தவறிவிட்டனர்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!