கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கியிலும் சிரியாவிலும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.6ஆக பதிவான நிலநடுக்கங்கள் காரணமாக துருக்கியில் 53,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர். அண்டை நாடான சிரியாவில் ஏறத்தாழ 6,000 பேர் உயிரிழந்தனர்.
வீடுகளை இழந்து மில்லியன்கணக்கானோர் தவித்தனர்.
இதற்கிடையே, உயிர்பிழைத்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு வழங்கும் வகையில் அது இதுவரை ஏறத்தாழ $8 மில்லியன் நிதி திரட்டியதாக சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று தெரிவித்தார்.