சென்னை: சிறையில் மவுன விரதம் மேற்கொண்டிருப்பதால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையத் தில் சசிகலா நேரில் முன்னிலை யாக மாட்டார் என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. அவர் ஜனவரி மாத இறுதி வரை மவுன விரதத்தைக் கடை பிடிக்க இருப்பதாகவும், இதன் காரணமாக அவரால் நேரில் முன்னிலையாக முடியாது என்றும் விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்திருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது.
சசிகலாவுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் முன்னிலை யாகி விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்திடம் தினகரன் தரப்பு சில முக்கிய ஆவணங் களை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட காணொளிப் பதிவு அடங்கிய பென் டிரைவ் ஒன்றும் இதில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக வட்டாரங்களில் சல சலப்பு நிலவுகிறது.