நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்ஸ் (என்எஃப்சி) தொழில்நுட்பத்தைக் கொண்டு பேருந்து, ரயில் கட்டணத்தைப் பயணிகள் தங்கள் விவேகக் கைபேசியின் வழி செலுத்தலாம். என்எஃப்சி தொழில்நுட்பத் துக்கு உட்படும் கைபேசிகள் மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஈசி லிங்க்' பயண அட்டையைப் பயன்படுத்துவது போலவே எம்ஆர்டி, எல்ஆர்டி, பேருந்துகளில் உள்ள அட்டைப் பதிவு இயந் திரங்கள் மீது பயணிகள் தங்கள் கைபேசிகளை வைத்து கட்டணத்தைச் செலுத்தலாம். 19 வகை எல்ஜி, சாம்சுங், சோனி கைபேசிகளின் வழி புதிய கட்டணம் செலுத்தும் முறையைப் பயணிகள் பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தில் மேலும் பல கைபேசிகள் படிப்படியாக சேர்க்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் புதிய கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்த விரும்புவோர் தொலைதொடர்பு நிறுவனங்களிலிருந்து என்எஃப்சி சிம் அட்டையை வாங்கவேண்டும். அதனைத் தொடர்ந்து தங்கள் கைபேசிகளில் உள்ள என்எஃப்சி வசதியை செயல்படுத்தவேண்டும். என்எஃப்சி கைபேசிகள் மூலம் கட்டணம் செலுத்துவதை நடை முறைப்படுத்துவதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம், 'ஈசி லிங்க்' ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து சோதனை முயற்சிகளில் ஈடுபட்டன. இந்த சோதனை முயற்சிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றன. எம்ஆர்டி ரயில் பயணத்துக்கு இந்தச் சோதனை முயற்சி 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பேருந்துகளுக்கும் சோதனை முயற்சி நடத்தப்பட்டது. சோதனை முயற்சியில் 1,000 பேர் 30,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தனர். பொதுப்போக்குவரத்துச் சேவைகளைத் தவிர்த்து நாடெங் கும் உள்ள 30,000க்கும் அதிக மான 'ஈசி லிங்க்' மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் பணம் செலுத்தலாம். சில்லறை வர்த்தகம், உணவு மற்றும் பானக் கடைகள், டாக்சிகள் இவற்றில் அடங்கும். சிங்கப்பூரில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் எம்1 நிறுவனம் முதலில் என்எஃப்சி சிம் அட்டைகளை விற்கும்.