கோலாலம்பூர்: மலேசியாவில் அரசாங்கச் சேவை அதிகாரிகள் ஆங்கில மொழியில் நன்கு புலமை பெற்று இருக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நெருக்கி வரு கிறார். இந்த நிலையில், மலேசிய போலிஸ் அதிகாரிகள் ஆங்கில மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். மூத்த போலிஸ் அதிகாரிகளுக் காக சென்ற மாதம் தீவிரமான ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதில் மாவட்ட போலிஸ் தலைவர்கள் உட்பட பெரிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு இருக் கிறார்கள்.
போலிஸ் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளைக் கடந்த காலத் திலும் நடத்தி இருக்கிறது என்று ஐஜிபி முகம்மது ஃபூசி ஹாருன் தெரிவித்தார். பிரதமரின் உத் தரவு வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்று கூறிய இவர், அது சரியான காலத்தில் இடம்பெறு கிறது என்றார்.