ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து தென்தமிழகத்தில் கொந்தளிப்பு

ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நேற்று ஐந்தாவது நாளாகப் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு வழங்கிய அனுமதி நீடித்திருந்தால் அலங்கா நல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியது. தடை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூரில் நேற்று மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. வாடிவாசம் முன்பு நடந்த இப் போராட்டத்தில் பலரும் கறுப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கைக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுத் தடையைக் கண்டித்து வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை போன்ற வற்றை மாவட்ட ஆட்சித் தலை வரிடம் நாளை திருப்பித் தந்து தங்களது கண்டனத்தை உணர்த்த இருப்பதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலை வர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து தீக்குளித்த ரமேஷ் என்னும் இளைஞர் நேற்று முன்தினம் இரவு மருத்துவ மனையில் மாண்டார். இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட் டங்களில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!