புருமடின்ஹோ: பிரேசிலில் அணைக்கட்டு உடைந்ததில் 200 பேருக்கு மேல் காணாமல் போயினர்.
இவர்களைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அணை உடைந்த சில மணி நேரங்களில் ஏழு உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
ஆனால் 200 பேருக்கு மேல் காணாமல் போனதால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று புரும டின்ஹோ நகர மேயர் அவிமார் டி மெலோ பார்சிலோஸ் கூறினார்.
'வேல் எஸ்ஏ'வுக்குச் சொந்த மான எஃகு சுரங்கத்தில் அணை உடைந்தது. இந்த நிலையில் விபத்து குறித்துப் பேசிய வேல் தலைமை நிர்வாகி ஃபேபியோ ஷவர்ட்ஸ்மேன், மொத்தமுள்ள 300 ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே பணியில் இருந்தனர் என்று கூறியுள்ளார்.
இதன்படி பார்த்தால் 100 பேர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மதிய உணவு வேளையில் விபத்து நிகழ்ந்ததால் சுரங்கத்தின் அலுவலகங்களும் உணவகமும் ஊழியர்களோடு அடித்துச் செல்லப்பட்டன என்றும் நிர்வாகி ஃபேபியோ ஷவர்ட்ஸ்மேன் கூறி னார். இதற்கிடையே பேரிடர் நிகழ்ந்த இடத்துக்கு அதிபர் விரைந்துள்ளார்.
பிரேசிலில் அணை உடைந்து பலர் பலி; 200 பேருக்கு மேல் காணவில்லை
27 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!