சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், மொசாம்பிக் நாட்டில் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள S$121,200 (US$90,000) நன்கொடை அளிக்கிறது.
அந்த நாட்டில் கொடூரமான புயல் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டது. வெள்ளம் முதலான பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.
நன்கொடையாக வழங்கப்படும் பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு, தண்ணீர், கழிவுநீர் அகற்று வசதிகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என்று இந்தச் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் இடாய் என்ற புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எந்த அளவுக்குப் பாதிப்பு என்று இன்னமும் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் பல இடங்களில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நிவாரணப் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன. தேவை ஏற்பட்டால் பேரிடர் நிவாரண குழு ஒன்றை அனுப்பவும் இந்தச் சங்கம் ஆயத்தமாக இருக்கிறது.
மொசாம்பிக்கில் புயல்: செஞ்சிலுவைச் சங்கம் $121,200 உதவி
22 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!