சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் ஜப்பானின் புதிய தூதரகக் கட்டடம் கட்டுவதற்காக ஏற்கெனவே தென்கொரிய அரசு அளித்திருந்த அனுமதியை ரத்துச் செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. பழைய தூதரக கட்டடம் சில ஆண்டுக ளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அந்த அலுவலகம் அருகேயுள்ள உயர்மாடிக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
2015ல் ஜப்பான் தூதரகத்தின் புதிய ஆறு மாடிக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை சோல் நகரம் வழங்கியது. ஆனால் ஜப்பானோ தூதரகக் கட்டடப் பணிகளைத் தொடங்குவதில் சுணக்கம் காட்டியது. தென்கொரிய சட்டப்படி கட்டடம் கட்ட அனுமதி பெற்று ஓராண்டுக்குள் கட்டடப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் ஜப்பானோ கட்டடப் பணிகளைத் தொடங்குவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வந்தது. அதனையடுத்து சோல் அந்த அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதுகுறித்து தென்கொரியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் ஜப்பானிய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது கட்டுமான அனுமதி ரத்துசெய்யப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்," என்றனர்.
ஜப்பானிய புதிய தூதரக கட்டட அனுமதியை ரத்து செய்தது கொரியா
11 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!