சுகாதார இணைய வாசலான 'ஹெல்த்ஹப்' இவ்வாண்டு இறுதிக்குள் மேம்பாடு காணும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார். அது பற்றிய மேல் விவரங்களைத் தெரிவிக்காத அமைச்சர், சிலர் தம்மிடம் தங்கள் பிள்ளைகளின் மருத்துவக் குறிப்புகளைக் காண்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர் என்றார்.
கடந்த ஆண்டு அக்டோப ரில் அறிமுகம் கண்ட 'ஹெல்த் ஹப்' இணைய வாசலில் பொது மக்கள் தங்கள் மருத்துவக் குறிப்புகளைப் பார்க்கலாம். நேற்று நடைபெற்ற தேசிய சுகாதார தகவல் தொழில்நுட்ப உச்சநிலை கூட்டத்தில் பேசிய திரு கான், "தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிங்கப்பூரின் சுகா தாரப் பராமரிப்பு முறையின் அறிவார்ந்த நிலை மேம்படும். இதன் மூலம் மக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கண்காணிக்க ஏதுவாக இருக்கும்," என்றும் விவரித்தார்.