கோலாலம்பூர்: சட்டவிரோதமாக கடன் கொடுத்து வந்த மிகப் பெரிய கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்திருப்பதாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அக்கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் புலன்விசாரணைப் பிரி வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சிறப்புப் படை போலிசார் மே 20ஆம் தேதி மேற்கொண்ட 11 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது அக்கும்பலின் முக்கியப் பேர்வழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். சட்டவிரோதமாக அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்த அக்கும்பலின் தொல்லைக்கு ஆளான ஒருவர் போலிசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலிசார் அந்த தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடந்த அக்டோபர் மாதம் முதல் கடன் முதலைகள் தன்னை மிகவும் தொல்லைப்படுத்தி வந்ததாக 48 வயதான ஒருவர் போலிசாரிடம் அண்மையில் புகார் கொடுத்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
சட்டவிரோதக் கும்பல் மலேசியாவில் முறியடிப்பு
25 May 2016 08:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2016 05:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!