சென்னை: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவினர் சட்டவிரோதமாக வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்ப தாக புகார் தெரிவித்து அதைத் தடுத்து நிறுத்தும்படி தேர்தல் ஆணையத்தை திமுக நேற்று கேட்டுக்கொண்டது.
அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகம் மூலமாக ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்களுக்கு அந்தக் கட்சித் தொண்டர்கள் சட்டவிரோதமாக பணம் கொடுக்கிறார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் திமுக பேராளர் ஆஸ்எஸ் பாரதி தெரிவித்து இருக்கிறார்.