கரூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்து, பின் திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி சட்டமன்ற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வாகை சூடினார்.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, செந்தில் பாலாஜி வைப்புத்தொகை வாங்கினால் அமைச்சர் பதவியைத் துறக்கத் தயார் என தமிழகப் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சூளுரைத்தார். இந்நிலையில், அரவக் குறிச்சியில் 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, “நான் வென்றுவிட்டேன். அமைச்சர் எப்போது பதவி விலகுவார்?” என்று கேட்டிருக்கிறார்.