பிரியங்கா: ராகுல் பதவி விலகுவது பாஜக வலையில் விழுவதற்கு சமம்

சென்னை: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவது பாஜகவின் வலையில் விழுவதற்கு இணையானது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் களத்தில் மோடிக்கு எதிராக தமது சகோ தரர் தனியாகப் போராடினார் என் றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதாக தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது.

“பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாகப் போராடவிட்டு ஒதுங்கிக் கொண் டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்?,” என்று பிரியங்கா ஆவேசத்துடன் கூறிய தாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், ரஃபேல் விவகாரம், ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற முழக்கம் ஆகியவற்றை ராகுல் காந்தி எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாகவும் அச் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிவித்தார் என் றும் இல்லையெனில் கட்சிப் பத வியில் இருந்து விலகப் போவதாக கூறினார் என்றும் ராகுல் பேசிய தாக அச்செய்தியில் உள்ளது.

இதே போல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர்களும் கூட கட்சி நலன் களை புறந்தள்ளிவிட்டு, தங்கள் மகன்களை முன்னிறுத்துவதில் அக்கறை காட்டினர் என்றும் ராகுல் காந்தி சாடியதாகத் தெரிகி றது. இதனால் காங்கிரஸ் வட்டா ரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!