கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. ஒரு நண்பனின் காதல் கைகூட தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்களின் கதையை உணர்வுபூர்வமாக முதல் பாகத்தில் சொல்லி இருந்தார் இயக்குநர் சமுத்திரகனி. இவர் இயக்கும் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார்தான் நாயகன். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. மேலும் அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி ஆகியோரும் உள்ளனர். நமீதா என்ற திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசினார் சமுத்திரகனி. “ஆண்பால், பெண்பால் தாண்டி, மூன்றாம் பால் இனத்தவர் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் இன்னல்களை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். நமீதாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை நெகிழவைக்கும்,” என்றார் சமுத்திரனி. “இப்படத்துக்குப் பின் திருநங்கைகள் மீது பெரிய மரியாதை ஏற்படும்,” என சசிகுமார் கூறினார்.
‘நாடோடிகள்-2’
21 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2019 11:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!