'சவரக்கத்தி'க்குக் காத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவரின் ஆளுமையைக் காணக் காத்திருக்கிறது தமிழ்ச் சினிமா. ராம், பூர்ணா, மிஷ்கின் என அவர் காண்பிக்கிற புகைப்படங்களே அவ்வளவு வசீகரிக்கின்றன. "நான் இதுவரை நகைச்சு வையைக் கையில் எடுத்ததில்லை. அதிகமாக பொய் சொல்லக்கூடிய மனிதரைப் பார்த்த பின்னால் உருவான வந்த கதை இது!'' என்று உரத்த சிரிப்போடு சொல்கிறார் மிஷ்கின். "முழுக்க முழுக்க நகைச்சுவையா இருந்தாலும், ஆத்மார்த்தமா ஒரு விஷயம் வைத்துள்ளேன்.
கத்தியை எதற்கு எடுக்க வேண் டும் எனச் சொல்லியிருக்கிகேன். 'உலகத்திலேயே சிறந்த கத்தி சவரக்கத்தி தான்' என்பர். அதற்குள்ளே ஒரு ஆழமான விஷ யத்தை அலசிப் பார்த்திருக்கி றேன். ஒரு வார்த்தையாக இருந் தாலும் 'சுள்' எனத் தைக்கிற வீரியம், முதல் அடியிலிருந்து கடைசி வரை தலைதெறிக்க ஓடும் கதையோட்டம் என என் னுடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும்!'