நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு போலிஸ் சம்மன்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலிசார் முடிவு செய்திருக்கின்றனர்.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) இரவு 9.30 மணிக்கு ராட்சத மின் விளக்குகளை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் உதவியாளர் மது, மற்றொரு உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சினிமா தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீதும் தயாரிப்பு நிர்வாகியின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் கிரேன் ஆபரேட்டர், கிரேன் உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நசரத் பேட்டை போலிசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் 10 பேருக்கும் சம்மன் அனுப்ப போலிசார் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

#இந்தியன் 2 #தமிழ்முரசு #கமல் #ஷங்கர் #விபத்து

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!