பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஒரே நாளில் 235 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து நேற்று பிற்பகல் வரை 2,031 பேருக்கு கிருமி தொற்றியிருக்கிறது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சொன்னார்.
செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய டாக்டர் ஹிஷாம், கிருமியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகக் கூறினார். இதுவரை மொத்தம் 215 பேர் கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 45 பேர் உள்ளனர்.
விசாரணையில் புதிதாக பாதிக்கப்பட்ட 235 பேரில் 60 பேர் ஸ்ரீபெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சி தொடர்பானது என்பது தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் மொத்தம் 23 பேர் கிருமிக்கு பலியாகிவிட்ட னர்.