சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்கு கொவிட்-19 தொற்றியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய சம்பவங்களில் மூன்றுக்கு சமூகப் பரவல் காரணம் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சமூகப் பரவலால் இந்நோயைப் தொற்றிய மூவர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குமிடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சிங்கப்பூரில் இந்நோயைத் தொற்றியோரின் எண்ணிக்கை 34,884க்கு அதிகரித்துள்ளது.