புதிதாக 183 பேருக்கு கொரோனா
சிங்கப்பூரில் புதிதாக 183 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளதாக இன்று நண்பகல் (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 44, 983க்கு அதிகரித்துள்ளது.
புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவை. அத்துடன், புதிதாக 23 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சிங்கப்பூர்கள் அல்லது நிரந்தரவாசிகள். எஞ்சிய 20 பேர் வேலை அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த 23 பேரில் ஐந்து பேர், முன்னதாக பாதிக்கப்பட்டோருடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற எழுவர், தங்களது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தற்காலிக தங்குமிடத்தில் வசிப்பவர்கள்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் ஊழியர்களுக்கு அடிக்கடி செய்யப்படும் உடல்நலப் பரிசோதனை வழியாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.