கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரே நாளில் 14 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து சென்றவர். மற்ற 13 பேரும் மலேசியர்கள். அவற்றில் 11 சம்பவங்கள் மலேசியாவின் புதிய கிருமித்தொற்று குழும
மாக உருவெடுத்துள்ள சிவகங்காவைச் சேர்ந்தவை. இதைத் தொடர்ந்து மலேசியாவில் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,999ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மலேசியாாவில் கொரோனா தொற்று பரவக்கூடும் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.