அண்மையில் ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்ற உடற்குறை உள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) சிங்கப் பூரைப் பிரதிநிதித்து பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரும் சனிக்கிழமையன்று வெற்றி ஊர்வலம் நடத்தப்படுகிறது. 57 ஆங்கர்வேல் சாலையில் அமைந்துள்ள ஆக்டிவ்எஸ்ஜி செங்காங் விளையாட்டு மையத் திலிருந்து வீரர்கள் கார்களில் அழைத்துச் செல்லப்படுவர். விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் வெற்றி ஊர்வலக் கார்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும். அதன்பிறகு வெற்றி ஊர்வலம் விவோசிட்டிக்குத் தொடரும். பாராலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த சிங்கப்பூர் வீரர்களில் பெரும்பாலோர் இன்று அதிகாலை சுமார் 5.35 மணிக்கு நாடு திரும்புவர் என்று தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் மல்லாந்து நீச்சலில் தங்கம் வென்ற யிப் பின் சியூவுக்கும் (இடது) 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் வெண்கலம் வென்ற திரேசா கோவுக்கும் (வலது) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு மில்லியன் மைல் கிறிஸ் ஃபிளையர் புள்ளிகள் வழங்கி சிறப்பித்துள்ளது.
பாராலிம்பிக் வெற்றி ஊர்வலம்
21 Sep 2016 07:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Sep 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!