இதற்கு முன்னில்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 338,779 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் ஒரே நாளில் 96,996 பேரை கொரோனா தொற்றியதே இதற்குக் காரணம்.
அவ்வட்டாரத்தில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையும் இதுதான்.
உலகில் இதுவரை 36,384,000 பேரை கொரோனா தொற்றிவிட்டது என்றும் அதனால் 1,057,000 பேர் மாண்டு விட்டனர் என்றும் ‘ராய்ட்டர்ஸ்’ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இப்போதைக்கு, அர்ஜெண்டினா, கனடா உட்பட 54 நாடுகளில் கிருமித்தொற்று அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.