கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்படாமல் தடுக்கும் நட வடிக்கையாக அனைத்து வெளி நாட்டு ஊழியர் தங்கும் விடுதி களிலும் புதிய, பரந்த அளவிலான தொற்று தடுப்பு, கட்டுப் பாட்டு (ஐபிசி) திட்டத்தை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தங்குமிட நிர்வாகி களுக்கும் குடியிருப்பாளர களுக்கும் தெளிவான பொறுப்புகளை வழங்கு வதோடு, கல்வி யையும் பயிற்சியையும் வழங்கும். இதனால் அவர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் பங்கை ஆற்ற முடியும்.
இதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் சுகாதார விதிமுறைகள் குறித்து சுயமாக இணையத்தில் கற்றுக்கொள்வர்.
உணவுக்கு முன் சோப்புப் போட்டு கைகளைக் கழுவுதல், முறையான முகக்கவச பயன்பாடு, பேசும்போது முகத்தைத் தொடாமல் இருப்பது, குழுக்களை ஐந்துக்கும் குறைவானவர்களாக வைத்திருத்தல் ஆகியவை சுகாதார விதிகளில் அடங்கும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது. இவை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பெரிய தங்கும் விடுதிகளில் ஒவ்வொரு வாரமும் சோதனையிடப்படும்.
கிருமித்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் தீவு முழுவதும் உள்ள அனைத்துத் தங்கும் விடுதிகளிலும் அமல்படுத்தப்படும் என்று கூறிய மனிதவள அமைச்சு, எதிர்காலத்தில் கிருமி பரவாமல் தடுப்பதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டது.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனும் நம்பிக்கை, பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழு, சுகாதார அமைச்சு, மளிதவள அமைச்சின் ஃபாஸ்ட் எனும் நம்பிக்கை, ஆதரவுக் குழுக்கள் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன.
சுமார் 500 பெரிய தங்கும் விடுதிகள் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சோதனை செய்யப்படும். வழக்கமான மற்ற ஆய்வுகளின்போது இதர தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப் படும் என்று அமைச்சு கூறியது. கிருமித்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நடைமுறைகளை தங்கும் விடுதி நடத்துநர்கள், ஊழியர்கள், விடுதியில் தங்கியிருப்போர் புரிந்துகொள்ள பயிற்சிகள் வழங்கப்படும்.
இதற்கான காணொளி, வரைபடங்கள் உள்ளிட்ட கற்றல் சாதனங்கள் தற்போது ஊழியர்கள் உடல் வெப்பநிலையை பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ‘FWMOMCare’ செயலியில் இடம்பெற்றுள்ளன.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை உறுதி செய்ய சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ‘ஏஸ்’ குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் லாம் மெங் சோன் தெரிவித்தார்.
சோதனைகளில் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய் நிர்வாகம் பற்றி அறிந்த தாதியர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். குறிப்பிட்ட தங்கும் விடுதி அல்லது ஊழியர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை வடிவமைப்பதில் தாதியர்கள் உதவியாக இருப்பார்கள் என்று திரு லாம் கூறினார்.
புதிய திட்டத்தைப் பற்றிய பயிற்சிகள் ஊழியர்களுக்கு கட்டாயமல்ல. ஆனால் தங்கும் விடுதி நடத்துநர் அவற்றை ஊழியர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம் என்றார். மனிதவள அமைச்சின் அதிகாரிகள் விடுதிகளுக்குச் சென்ற போது ஊழியர்கள் பலர் முகக்கவசத்தை அரைகுறையாக அணிந் திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
அப்படிப்பட்ட ஊழியர்களிடம் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சுவாசத் துளிகள் மூலம் கிருமிப் பரவுவதை அவர்களுக்கு விளக்கலாம்.
புதிய திட்டம், பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு மாற்றாக அமையாது.இருந்தாலும் கிருமிப் பரவலைத் தடுப்பதில் முன்னிலை அரணாகச் செயல்படும் என்று டாக்டர் லாம் குறிப்பிட்டார்.
புதிய திட்டம் பற்றிய பயிற்சி சாதனங்கள், வெளிநாட்டு ஊழி யர்களில் 90 விழுக்காட்டினர் பயன்படுத்தும் வகையில் தமிழ், சீனம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.புதிய திட்டம் பற்றி தமிழ் முரசிடம் கருத்து கூறிய ‘சுங்கை தெங்கா லாட்ஜ்’ தங்கும் விடுதி ஊழியரான திரு பிரம்மதேவன் செல்லையா, 33, “பாதுகாப்பு விதி முறைகளுக்கு இணங்க தங்கும் விடுதிகள் செயல்பட்டாலும் சில அம்சங்களில் மேம்படுத்த இடம் உள்ளது,” என்றார்.
“விடுதிகளில் உள்ள கடைகள், சிற்றுண்டிச் சாலைகளுக்கு கூட்டமாக போகும் ஊழியர்களை மேலும் பாதுகாப்பாக நிர்வகிக்க லாம். பயிற்சித் திட்டங்களுடன் நிறுத்திவிடாமல் தினசரி நடை முறையில் பாதுகாப்பு இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறி னார்.
எம்இஎஸ் குழுமத்தில் செயல் முறைக்கான துணை இயக்குநர் திரு முகம்மது சாதிக், “நம் தங்கும் விடுதிகளில் வாழ்வதற்கான பயனுள்ள பாதுகாப்புத் திட்டங்களை குடியிருப்பாளர்களுக்கு உடன்பாடுடன் செயல்படுத்த ‘ஐபிசி’ திட்டம் வழி வகுக்கிறது. கட்டுப்பாடுகள் குறித்த விவரங் களைப் பகிர பல உத்திகளைப் பயன்படுத்துகிறோம். முறையான சுகாதாரத்தை எப்படி செயல்படுத்துவது, கிருமி நீக்கத்திற்கான வழிகள், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான தினசரி நினைவூட்டல் போன்றவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கற்பிக்கிறோம்,” என்றார்.