பாலிவுட்டில் முன்னணி நடிகையான வித்யா பாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை வித்யா பாலன் கடந்த வாரம் அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வித்யா பாலன் செல்ல மறுத்துவிட்டார்.
இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்குச் சென்ற படக்குழுவினரின் வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்குச் செல்ல மறுத்ததால்தான் படப்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள்தான் என்னை இரவு விருந்துக்கு அழைத்தார்கள். நான் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி உத்தரவிடவில்லை,” என்று மறுப்புத் தெரிவித்து இருக்கிறார்.