கிரீஸ் செல்லும் குடியேறிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பிள்ளைகள்

ஜெனிவா: ஐரோப்பிய நாடுகளின் கரையோரத்தில் மேலும் இரு பிள்ளைகள் மூழ்கி இறந்திருக்கும் வேளையில், துருக்கியிலிருந்து கிரீஸுக்கு குடியேறிகளாக வருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பிள்ளைகள் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. இதேபோல், கிரீஸிலிருந்து மெசிடோனியாவுக்குச் செல்வோ ரில் ஆடவர்களைவிட மாதர், பிள்ளைகளே அதிகமானோர் என்றும் ஐநா குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கூறு கிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் மிக அதிக அளவிலான மக்கள் வன்முறை, ஏழ்மை, ஆகியவற்றிலிருந்து தங் களை விடுவித்துக் கொள்ள உயிரைப் பணயம் வைத்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் சூழலில் வெளிவந்துள்ளது குறிப்பிடத் தக்கது. "கிரீஸ், துருக்கி நாடுகளுக்கு இடையிலான கொடுமையான கடற்பயணத்தைக் கடப்பவர்களில் 36 விழுக்காட்டினர் பிள்ளைகள்," என்று யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான சேரா கிரோவ் விளக் கினார். அத்துடன், மெசிடோனியா நாட்டுக்குச் செல்வோரில் 60 விழுக்காட்டினர் மாதர், பிள்ளை கள் என்றும் இவர் கூறுகிறார்.

ஏதென்ஸ் அருகே ஒரு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்த படகிலிருந்து குடியேறிகளும் அகதிகளும் வெளியேறும் வேளையில் அவர்களில் ஒருவரான இந்தச் சிறுவன் போர்வைகளை தலையில் சுமந்து செல்கிறான். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!