ப. பாலசுப்பிரமணியம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து தமிழ் நாடே சிறிது சிறிதாக தனது வழக்கநிலையிலிருந்து மாறிக் கொண்டு வந்தது. இந்திய நேரப்படி நேற்று முன் தினம் மாலை சுமார் 5.30 மணி அளவில் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக சில தமிழக ஊடகங்களில் செய்தி வெளி வந் தது. அதை உடனடியாக அப் போலா மருத்துவமனை மறுத்தது. இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்று அதி காரத்துவ செய்தியை அப்போலே மருத்துவமனை வெளியிட்டது. அன்று மாலை 5.30 மணியி லிருந்து 11.30 மணி வரையில், எதை நம்புவது, என்னதான் நடக்க விருக்கிறது, கலவரம் ஏதேனும் மூண்டுவிடுமோ என்ற குழப்பத் தில் சென்னை மக்கள் இருந்தனர். இதில் சென்னைக்கு பயணம் செய்திருந்த சிங்கப்பூரர்களும் பாதிப்புக்குள்ளாயினர்.
கூடுதல் செய்தி: சுதாஸகி ராமன்