பலவீனமாகவும் அந்த நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ள முதிய வர்களும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளைப் பின்பற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக புத்தாக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட சவால் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாதிமை இல்லங்களில் வசிப் பவர்கள் பங்கேற்கும் வகையில் இந்தப் போட்டிகளுக்கு சொங் பாங் சமூக விளையாட்டு மன்றமும் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லமும் இணைந்து ஏற்பாடு செய்தன.
'ஏஐசி' எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த மாதம் 27ஆம் தேதி போட்டி கள் நடைபெற்றன.
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சோதனையின் அடிப் படையில் சவால் போட்டி நடத்தப் பட்டது.
பின்னர் இதர இல்லங்களில் உள்ளவர்களுக்கும் போட்டி ஏற்பாடு செய்தால் முதியோர் சுவாரசியமாக ஈடுபடுவார்கள் என்ற கருத்து எழுந்தது.
அதன் அடிப்படையில் ஈசூனில் உள்ள 'ஆல் செயின்ட்ஸ் ஹோம்', ஸ்ரீ நாராயண மிஷன், சுவாமி ஹோம் எனும் சன்ஷைன் வெல்ஃபேர் ஆக்ஷன் மிஷன், வில்லா ஃப்ரான்சிஸ் முதியோர் இல்லம் ஆகிய நான்கு தாதிமை இல்லங்களில் வசிக்கும் குடியிருப்பாளர் களுக்கு இடையே மாற்றியமைக்கப்பட்ட விளையாட்டு நடத்தப் பட்டது.
நான்கு இல்லங்களிலும் தனித் தனியே போட்டிகள் நடைபெற்றாலும் மெய்நிகர் தளம் வழி நான்கு அமைப்புகளும் மின்னிலக்க முறை யில் இணைக்கப்பட்டிருந்தன.
சக்கர நாற்காலி பந்தயம், 'ஸ்போர்ட் ஸ்டேக்கிங்', 'லேடர் டாஸ்' ஆகிய மூன்று போட்டிகளில் அவர்கள் பங்கேற்றனர்.
நான்கு இல்லங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகள் இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக மூன்று மணி நேர விளையாட்டுப் பயிற்சிக்குச் சென்று பயிற்சி பெற்றனர்.
போட்டிகளுக்குத் தேவையான தளவாடங்களை வழங்கி இரு அமைப்புகள் ஆதரவு அளித்தன.
சட்ட, உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கா.சண்முகம் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார்.