ரெட் லயன்ஸ்' சிவப்புச் சிங்கங்கள் ஐவர் விமானத்திலிருந்து குதித்து அழகிய வானிற்கு மேலும் அழகுச் சேர்த்து பார்வையாளர்களின் ஆரவார வரவேற்புடன் வந்து துல்லியமாக மிதக்கும் மேடையில் வந்திரங்கினர்.
அந்த ஐவரில் மூத்த வாரண்ட் அதிகாரி மகேஸ்வரன் பிராங்க்ளின் மிராண்டாவும் ஒருவர். இதுவரை 1550 முறை அவர் 'பேரஷூட்' மூலம் குதித்துள்ளார்.
இரண்டு 'அபாச்சி' ஹெலிகாப்டர்களும் 'எஃப்15எஸ்ஜி' ரக போர் விமானங்களும் பார்வையாளர்களுக்கு மிதக்கும் மேடைக்கு மேல் வான் சாகசம் செய்து பிரமிக்க வைத்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சடங்குபூர்வ அணிவகுப்பு நேற்றைய முற்பகுதியில் மீண்டும் நடைபெற்றது.
'ரெட் லயன்ஸ்' சிவப்பு சிங்கங்கள், 'அன்றாட கதாநாயகர்களான' முன்களப் பணியாளர்களுக்கு நன்றி நல்குதல், இசை, நாடகப் பிரிவின் படைப்பு, 'செசைரி செஸாலி' மற்றும் 'தி ஃப்ரெஷ்மன்' இருவரின் பிரத்யேக இசைப் படைப்பும் அணிவகுப்புக்கு முந்தைய அங்கத்தில் இடம்பெற்றன.
தேசிய தினக் கொண்டாட்டத்தில் படைப்பாளர்களும் பார்வையாயளர்களும் கொரோனா கிருமி சூழல் காரணமாக மிகக் குறைவாக இருந்தாலும் தொழில்நுட்பமும் முப்பரிமாணக் காட்சிகளும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக்கின.
வண்ண விளக்குகள் மேடையையும் காலி இருக்கைகளையும் நிறைத்தன. ஒவ்வோர் இருக்கையிலும் பொருத்தப்பட்டு இருந்த 'ஸ்மார்ட் லைட்ஸ்' திறன் விளக்குகள் அந்தந்த அங்கத்திற்கு ஏற்ப வண்ணத்தை மாற்றி கொண்டாட்ட உணர்வைப் பெருகச் செய்தது.
வழக்கமாக 25,000 பேர் நிறைந்து இருக்கும் அரங்கில் 1,000 பேர் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அணிவகுப்பை அதிபர் பார்வையிட்டபோது, மிதக்கும் மேடைக்கு வலப்புறம் நீரில் நிலைகொண்டிருந்த கப்பலிலிருந்து 21 முறை ஒலித்த மரியாதை பீரங்கிக் குண்டு முழக்கம், நாட்டின் மீட்சியைப் பறைசாற்றுவதாக கம்பீரத்துடன் ஒலித்தது.
இந்த ஆண்டின் மற்றொரு வித்தியாசமான அங்கமாக மிதக்கும் மேடையைத் தவிர்த்து வேறு நான்கு இடங்களில் இருந்தும் நிகழ்ச்சி அங்கங்களைப் படைத்தனர்.
முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட அந்த அங்கங்கள் நேரடி நிகழ்ச்சியில் கோவையாக இணைக்கப்பட்டன. ஜுவல் சாங்கி, மரினா அணைக்கட்டு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், இயோ சூ காங் அரங்கு ஆகிய இடங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட அந்த அங்கங்களில் 600 பேர்வரை பங்கெடுத்தனர்.
சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டம் நேற்று பத்தாவது முறையாக மரினா பே மிதக்கும் மேடையில் கொண்டாடப்பட்டது.
முதன் முதலில் தற்காலிக மேடையாக அமைக்கப்பட்ட இந்த மிதக்கும் மேடைக்கு புகழாரம் சூட்டும் வகையில் காணொளி ஒன்று ஒளிபரப்பட்டது.
இங்கு முதன் முதலாக 2007ஆம் ஆண்டில் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு தியோ ஜிங் சியோங், மிதக்கும் மேடை தேசிய தினக் ெகாண்டாட்டத்தை தாங்கக்கூடியதாக, வலுவாக உள்ளதாக எனப் பலரும் ேகட்க அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.
இங்கு நிரந்தரமாக அமையவுள்ள தேசிய சேவை சதுக்கத்தை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளன.
இந்த மிதக்கும் ேமடையில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் தவிர அடிப்படை ராணுவப் பயிற்சி நிறைவு அணிவகுப்புகள், புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டங்கள், ரிவர் ஹொங்பாவ் கொண்டாட்டங்களும் போன்வறையும் இடம்பெறுகின்றன.
இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்ட ஏற்பாட்டாளர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு பசுமை இயக்கங்களுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றினர்.
இவர்கள் தேசிய தின சிறப்பு அன்பளிப்புப் பைகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும் அதே சமயம் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் உள்ள அன்பளிப்புப் பகைளை உருவாக்க எத்தகைய பொருட்களைப் பயன்படுத்தலாம் என ஆலோசனை செய்தனர்.