காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் காணொளி வசதி மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏராளமானோர் இவற்றில் பங்கேற்று அவரது பாடல்களைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.