பல தடைகளைத் தகர்த்து, வெற்றி நடைபோடுகிறது சிம்பு நடித்திருக்கும் 'மாநாடு' படம். படத்தைப் பற்றி
பலரும் நல்ல விமர்சனங்களையே பதிவு செய்து வருகின்றனர்.
அதனால் பெரிதும் மகிழ்ந்திருக்கும் சிம்பு, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் இணைந்து கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடி இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த இந்தப் படத்திற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்திருந்தனர். பலவித தடைகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை
வெளியீட்டு விழா அண்மையில்
சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் சிம்பு கண்ணீருடன், "நிறைய பிரச்சினை கொடுக்குறாங்க. அதையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துகோங்க," என்று பேசியது ரசிகர்கள் அனைவரையும் கலங்க வைத்தது.
படமும் தடங்கல்களைத் தாண்டி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. 'மாநாடு' படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நடிகர் சிம்புவும் இணைந்து கேக் வெட்டி, இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்நிகழ்வில் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் இல்லாதது ஏன் என்ற கேள்வியும் ரசிகர்கள்
மத்தியில் எழுந்துள்ளது.
இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவிற்கு ரஜினிகாந்த், சூர்யா
சிவகார்த்திகேயன் என திரைப்
பிரபலங்கள் பலரும் வாழ்த்து
தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'மாநாடு' குறித்து வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான செய்தி
களைப் பகிர்ந்துள்ளார்.
"வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அரவிந்த்சாமியைத்தான் கேட்டிருந்தேன். அவருக்காகவே வசனங்கள் எழுதப்பட்டன. ஆனால், படப்பிடிப்புத் துவங்க நீண்ட இடைவெளியானதால் அரவிந்த்சாமி அதிலிருந்து விலகினார். அதன்
பின்னர்தான் எஸ்.ஜே.சூர்யாவை
ஒப்பந்தம் செய்தோம்.
"கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டார் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் அவருக்காக வசனங்களை மாற்றி எழுதினோம். நல்ல வாய்ப்பை இழந்தார் அரவிந்த்சாமி.
"மாநாடு' பட பிரச்சினை தெரிந்தவுடன் நடிகர் சிவகார்த்திகேயன்
நள்ளிரவில் என்னுடன் தொடர்புகொண்டு எதுவும் உதவி வேண்டுமா? என்று விசாரித்தார்," என்று நெகிழ்வுடன் கூறினார் இயக்குநர்.
இதற்கிடையில் 'ஜெய் பீம்' படத்தைப்போல 'மாநாடு' படமும்
சர்ச்சையில் சிக்கியுள்ளது.
"இந்தப் படத்தில் 'இந்து -
முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக காட்சிகள் உள்ளன. பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்," என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிம்பு முதன்முறையாக இஸ்லாமியராக நடித்துள்ள 'மாநாடு' படத்தில், "அமெரிக்காவில் குண்டு வெடித்தால் தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியர் என்றால் முஸ்லிம் தீவிரவாதி என்கிறோம். தீவிர
வாதிக்கு ஏது சாதி, மதம்," போன்ற அனல் தெறிக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தில் சிம்பு புகைபிடிக்கும் காட்சிகளில் 'புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு' என்ற சொற்றொடரை திரையில் வெளியிட வில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தைப்போல 'மாநாடு' படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும் சிம்புவின் அலட்டல் இல்லாமல் அடக்கமாக வெளியாகியுள்ள இந்தப் படம் சிலம்பரசனின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.
'மாநாடு' படத்தில் சிம்புவும் காவலராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் மோதிக்கொள்ளும் காட்சி.