சக்தி மேகனா
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் இவ்வாண்டு 22ஆவது தேசிய கருணை விருதையும் அக்கறையுள்ள பயணிக்கான விருதையும் வழங்கி உள்ளது.
போக்குவரத்துத் துறையில் மக்களுக்காக கருணைக் காட்டும் வதில் முன்மாதிரியாகத் திகழும் ஊழியர்களும் பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
திருமதி அஞ்சு பிள்ளை, சிறந்த அக்கறையுள்ள பயணிகளுக்கான விருதை வென்றார். அவர், தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில் தாதி யாகப் பணிபுரிந்து வருகிறார்.
பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு திருமதி அஞ்சு, சக தாதியர்களான திருமதி ஏரியன் குய்மினோ பெர் மோய், திருமதி டயாக் லுர்டெஸ் ஆர்லோஸ் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வயதானவர் ஒருத்தர், ரத்தம் வழிந்தோடிய நிலையில் விழுந்துகிடந்தார். அடுத்த வினாடியே திருமதி அஞ்சு, அவரது நாடித்துடிப்பை பரிசோதனை செய் தார். இதயத் துடிப்பு இல்லாததால் உடனடியாக அவருக்கு இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் முதலுதவி யைச் செய்தார். எட்டு நிமிட போராட்டத்திற்குப் பிறகு வயதான வருக்கு மூச்சுத் திரும்பியது.
"ரயில் நிலையத்திற்கு வந்தபோது வயதானவரைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. நானும் என்னுடைய தோழிகளும் அந்தச் சமயத்தில் அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க லாம். நமது சமுதாயத்தில் ஒருவர் ஆபத்தில் இருந்தால் அதை வேடிக்கை பார்க்காமல் உடனடியாக உதவி செய்வது அவசியம்," என்று திருமதி அஞ்சு வலியுறுத்தினார்.
அக்கறையுள்ள பயணிகளுக்கான பாராட்டு விருதைப் பெற்ற திரு திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன், சுகாதார உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
வயதானவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி, ரயில்தள இடைவெளியில் சிக்கியதைப் பார்த்ததும் ரயிலில் அமர்ந்திருந்த அவர், உடைமைகளை விட்டுவிட்டு வயதானவருக்கு உதவி செய்தார்.
இந்தச் சம்பவத்தின்போது வய தானவருக்கு யாரும் உதவி செய்ய வரவில்லை என்பது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.
"நமது சமுதாயம் மற்றவர்களுக்கு உடனே உதவி செய்ய வேண்டிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்றார் திரு திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன்.
திரு கேசவன், திரு அருள், திருமதி பரமேஸ்வரி சிலகுமாரன் ஆகிய மூவருக்கும் 'டிரான்ஸ்போர்ட் கோல்ட்' விருது வழங்கப்பட்டது.
எஸ்எம்ஆர்டி பேருந்து எண் 975ன் ஓட்டுநரான திரு கேசவன், ஒரு சமயம் நடுத்தர வயதுடைய ஒருவர், பேருந்திலிருந்து இறங்கும் போது விழுந்துவிட்டதைப் பார்த்தார்.
உடனே அவரை பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர வைத்து கட்டுப்பாட்டு நிலையத்திற்கு கேசவன் தகவல் கொடுத்தார்.
பின்னர் அரைமணி நேரத்திற்குப் பிறகு எதிர்திசையில் பேருந்தை ஓட்டிக்கொண்டு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த ஆடவர் இன்னமும் பேருந்து நிறுத்தும் இடத்தில் தடுமாறிக்கொண்டு இருந்ததை அவர் கவனித்தார்.
"உடனே என்னுடைய பேருந்தில் இருக்கும் பயணிகளை அடுத்த பேருந்தை எடுக்க வழிகாட்டிவிட்டு தடுமாறிக்கொண்டிருந்த ஆட வருக்கு மருத்துவ உதவியாளர்கள் வரும் வரை கவனித்துக் கொண்டேன்," என்றார் கேசவன்.
சென்ற ஆண்டு ரயில் ஓட்டு நரான திரு அருள்ராஜ் ரயிலை செலுத்திக்கொண்டிருந்தபோது பழுதடைந்து இரு நிலையங்களுக்கு இடையே நடு வழியில் நின்றுவிட்டது. ரயிலில் தாயுடன் இருந்த குழந்தை முடியாமல் இருந்ததைக் கண்டார். அவர், ரயில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்தார்.
"குழந்தைக்கு சரியாகும் வரை நான் கவனித்துக்கொண்டேன். இந்த உதவியால் கிடைத்த கௌர வத்தை எஸ்எம்ஆர்டியின் சக ஊழியர்களுக்கும் ரயில் ஓட்டுர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்," என்று திரு அருள் கூறினார்.
சென்ற மார்ச் மாதத்தில் திருமதி செங் தனது தங்கையின் பழுதானச் சலுகை அட்டையை மாற்ற ஹவ்காங் பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்சிட் லிங்க் முகப்புக்குச் சென்றார். அன்று அவர் அட்டையை மாற்றுவதற்குப் போதிய பணம் கொண்டு வராததால் வாடிக்கையாளர் சேவை அதிகாரியான திருமதி பரமேஸ்வரி சிலகுமரன் பண உதவி செய்தார்.
திருமதி செங் அவருக்கு பணத்தை திருப்பிச் செலுத்தும்போது அதை திருமதி பரமேஸ்வரி வாங்க மறுத்துவிட்டார். இதைபோல் பல வாடிக்கையாளர்களுக்கு அவர் பண உதவி செய்து உள்ளார்.
"நான் செய்த இந்தச் சிறிய உதவிகள் என் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கவில்லை. இந்த விருது மிகவும் எதிர்பாராத ஒன்று. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று அவர் கூறினார்.
இவ்விருது நிகழ்ச்சியில் போக்கு வரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை பாராட்டினார். "கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டு வருவததற்கு பொருளியல் வளர்ச்சி மட்டுமல்ல சமூகத்தில் சிறந்த குணாதிசயங்கள் மிக்கவர்களும் தேவை. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பணிவன்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தப் பண்புகளை இவ்விருதுகள் ஊக்குவிக்கின்றன," என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.