இவ்வாண்டு டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுத் தொகை $16 மில்லியன்.
டோட்டோ வரலாற்றில் இதுவே ஆகப் பெரிய தொகை எனக் கூறப்பட்டது.
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வாண்டுக்கான பரிசுத் தொகையே ஆக அதிகம் என சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
சென்ற ஆண்டு பரிசுத் தொகை $8 மில்லியன்.
சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் $1.5 மில்லியன் பரிசுத் தொகை யாருக்கும் கிடைக்கவில்லை.
அதனையடுத்து திங்கட்கிழமை நடந்த $4 மில்லியன குலுக்கிலும் வெற்றியாளர் இல்லை.
அதனால் இந்தத் தொகை எதிர்வரும் குலுக்கலில் சேர்க்கப்பட்டு $16 மில்லியனாக அறிவிக்கப்பட்டது.
சீனப் புத்தாண்டையொட்டிய மாபெரும் டோட்டோ குலுக்கு வெள்ளிக்கிழமை ( 11 பிப்ரவரி) இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.