திங்கட்கிழமை அன்று சிங்கப்பூரில் இருவருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்தது.
10 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட டோட்டோ ஜாக்பாட் பரிசை இருவர் பகிர்ந்துகொண்டனர்.
பரிசுபெற்ற சீட்டுகளை தெம்பனீஸ் கடைத்தொகுதியில் ஒருவரும் ஆர்ச்சர்ட் பிளாசாவில் மற்றொருவரும் வாங்கினர்.
திங்கட்கிழமை (ஜனவரி 10) மாலை 6.30 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது.
முதல் பிரிவுக்கான பரிசுத்தொகை மொத்தம் $10,713,876 ஆகும்.
அதனால் அந்த அதிர்ஷ்டசாலிகள் இருவருக்கும் தலா $5.36 மில்லியன் கிடைக்கும்.
ஜாக்பாட் பரிசைப் பெற்ற எண்கள் 8, 11, 17, 21, 30, 44 ஆக இருந்தன. கூடுதல் எண் 48.
வெள்ளிக்கிழமை $5 மில்லியன் புத்தாண்டு சிறப்பு டோட்டோ குலுக்கல் நடைபெற்றபோது யாருக்கும் பரிசு கிடைக்கவில்லை.
அதனால் அந்தத் தொகை இன்றைய தேதிக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த வாரயிறுதியிலும் திங்கட்கிழமை அன்றும் சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் பரிசுச்சீட்டுகளை வாங்கினர்.