ஆண்டுதோறும் அரங்கேறிவரும் 'சிங்கே' ஊர்வலம் இவ்வாண்டு அதன் பொன்விழாவைக் கொண்டாடியது. இதைச் சித்திரிக்கும் வண்ணம் நேற்று ஜூவல் சாங்கியில் தொடங்கியது ஊர்வலம்.
யாரையும் ஈர்க்கக்கூடிய கண்கவர் படைப்புகளைக் கொண்ட இந்நிகழ்வு இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பானது. சிங்கப்பூரின் நான்கு இனத்தவரின் திருமணச் சடங்குகளைச் சித்திரிக்கும் அங்கம் உட்பட பல்லின சமுதாயப் படைப்புகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
முதன்முறையாக 'சிங்கே' ஊர்வலத்தில் 17 சிறிய மிதவைகள் இடம்பெறும்.
தீவெங்கும் உள்ள 14,000 குடியிருப்பாளர்கள் அவற்றை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.